ETV Bharat / bharat

ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கு: டெல்லியில் என்சிபி அலுவலகத்தில் இயக்குநர் அமீர் ஆஜர்! - Director Ameer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 12:45 PM IST

Updated : Apr 2, 2024, 4:25 PM IST

அமீர்
அமீர்

Director Ameer: ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தில் இயக்குநர் அமீர் இன்று ஆஜராகினார்.

டெல்லி: டெல்லியில் இரண்டாயிரம் ரூபாய் கோடி மதிப்புள்ள 50 கிலோ சூடோபெட்ரைன் என்ற போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிடிபட்ட 3 பேர் கொண்ட போதைப்பொருள் கும்பலிடம் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

இது தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக்கிற்கும் தொடர்பு இருப்பது மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜாஃபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஜாஃபர் சாதிக்குடன் இணைந்து இக்கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜாஃபர் சாதிக் தயாரிக்கும் படத்தை இயக்கும் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அந்த சம்மனில் இவ்வழக்கு விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் இரண்டாம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.

இதனையடுத்து இயக்குநர் அமீர் இன்று டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர், 'இறைவன் மிகப்பெரியவன்' என்ற திரைப்படத்தை ஜாபர் சாதிக் உடன் இணைந்து இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாகவும், கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் என் தரப்பில் உள்ள நியாயத்தையும் உண்மையையும் எடுத்துச் சொல்வேன் என்றும் வாட்ஸ்அப் மூலம் அமீர் என்சிபி அதிகாரிகளின் சம்மனுக்கு பதிலளித்து இருந்தார். மேலும், இறைவன் அருளால், 100 சதவீதம் வெற்றியோடு வருவேன். அந்த நம்பிக்கையுடன் எப்போதும் இருக்கிறேன். 'இறைவன் மிகப்பெரியவன்' என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் விவகாரம்: மத்திய போதைப் பொருள் அதிகாரிகளுக்கு இயக்குநர் அமீர் கடிதம்! - Narcotics Control Bureau

Last Updated :Apr 2, 2024, 4:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.