ஹைதராபாத்தைச் சேர்ந்த சாந்தி ராஜா என்ற இளைஞர், எஸ்பிபி பல்வேறு மொழிகளில் பாடிய 425 பாடல்கள் அடங்கிய டேக்கை கழுத்தில் அணிந்து மண்டியிட்டபடியே நடந்து சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இளைஞரின் இந்த உருக்கமான செயல் காண்போரை கண்கலங்கச் செய்தது.