Good time for pongal cook: தமிழர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் பண்டிகை என்றாலே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து, படையலிட்டு சூரிய பகவானை வழிபடுவார்கள். மேலும் நல்ல நேரம் பார்த்து தான் பெரும்பாலும் மக்கள் பொங்கல் வைப்பார்கள். எனவே, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று பொங்கல் வைப்பதற்கான உகந்த நேரம் என்ன? இந்த ஆண்டு பொங்கல் எப்படி அமையும்? என்பது குறித்து திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் சங்கர சுப்ரமணியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு நேயர்களுக்கு விவரிக்கிறார். அதை இந்த காணொலியில் காணலாம்.