தமிழ்நாடு

tamil nadu

பண்டிகை காலத்தில் பளபளக்கும் ஆடைகளோடு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்...

By

Published : Sep 14, 2022, 12:27 PM IST

பண்டிகை காலத்தில் பளபளக்க ஆடைகளோடு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்...
பண்டிகை காலத்தில் பளபளக்க ஆடைகளோடு ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்... ()

திடீரென ஏற்படும் உடல்நல பிரச்சினைகள் நம்மை பண்டிகை கால உற்சாகங்களில் முழுவதுமாக ஈடுபடவிடாமல் தடுத்துவிடும். அத்தகைய சூழலை தவிர்க்க சில ஆசனங்கள் பற்றி காணலாம்...

பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாதவை. பண்டிகைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஆடைகள் தேர்ந்தெடுப்பது என தயாராகி விடுகிறோம். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறுவதால் நம் உடல்நிலை பண்டிகைகளில் இருந்து நம்மை தூர விலக்கி விடுகின்றது. பண்டிகைகளுக்கு எப்படி புத்தாடை, பலகாரங்களுடன் தயாராகிறோமோ, அதுபோல ஆரோக்கியமான பழக்க வழக்கங்கங்கள் மூலம் உடல்நலத்தையும் தயார்படுத்த வேண்டும்.

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க யோகாசனங்கள் மிகவும் உதவுகின்றன. ஆசனங்கள், சுவாச முறைகள் மற்றும் தியானம் போன்றவைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தீபாவளி பண்டிகை காலம் முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.

ஜானு சிரசாசனம்: இந்த ஆசனம் உங்கள் முதுகுத்தண்டுக்கு நல்ல நீட்சியைக் கொடுத்து மிருதுவாக்கும். இது உங்கள் வயிற்று மற்றும் இடுப்பு தசைகளையும் பலப்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

உஷ்த்ராசனம்: ஒட்டக போஸ் என்று அறியப்படும் உஷ்த்ராசனம் உங்கள் முதுகெலும்பை பலப்படுத்துகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது. பெண்கள் கர்ப்பமாக இருந்தால், முழங்கால் அல்லது கழுத்தில் காயம் இருந்தால் அல்லது கடுமையான முதுகுவலி இருந்தால் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும்.

உஜ்ஜயி பிராணயாமா: பிராணயாமம் எப்போதும் உங்கள் தினசரி பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வெற்றி மூச்சு என்று அழைக்கப்படும் உஜ்ஜயி பிராணயாமா ஒரு எளிய பயிற்சி. இது நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது. மேலும் இந்த பயிற்சி நமது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

கபாலபதி: இந்த யோகாசனம் முன் மூளையின் சுத்திகரிப்பு நுட்பமாகும். இந்த ஆசனம் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், முதுகுத்தண்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

சூரிய நமஸ்காரம்: இது சிறந்த யோகா பயிற்சிகளில் ஒன்றாகும். இதை தினமும் காலையில் முதலில் செய்யலாம். இது உங்கள் முழு உடலையும் உற்சாகப்படுத்துகிறது மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உங்களை தயார்படுத்துகிறது. இது உங்கள் உடலை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதுகுத்தண்டு பாதிப்பு உள்ளவர்கள் இதைப் பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

சவாசனம்: இது உங்கள் தசைகளை தளர்த்தவும், உங்கள் உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓடவும் அனைத்து ஆசனங்கள் செய்து முடித்த பிறகு நீங்கள் செய்ய வேண்டிய இறுதி ஆசனம் ஷவாசனா ஆகும்.

மேற்கூறிய யோகாசனங்களைத் தவிர, பண்டிகைகளின் கொண்டாட்டத்தை முழுவதுமாக அனுபவித்திட நாம் மனதில் கொள்ள வேண்டிய மற்ற சில விஷயங்கள் உள்ளன.

சரியான உணவு பழக்கங்களை பின்பற்ற வேண்டும். அடிக்கடி நீர் பருகி உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க:இதைச் சாப்பிட்டால் 12 மணி நேரம் வரை பசிக்காது...? அதிசய "நாக்டூன்" கிழங்கு...

ABOUT THE AUTHOR

...view details