தமிழ்நாடு

tamil nadu

அருப்புக்கோட்டையில் பரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி மரணம்!

By

Published : Dec 8, 2021, 1:27 PM IST

pregnant-woman-dies-after-eating-barota
pregnant-woman-dies-after-eating-barota

அருப்புக்கோட்டை வதுவார்பட்டியில் பரோட்டா சாப்பிட்ட ஐந்து மாத கர்ப்பிணி வாந்தி மயக்கம் எடுத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

விருதுநகர்:அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் சங்கன். இவர் கட்டடத் தொழிலாளியாகப் பணிபுரிந்துவருகிறார். இவருடைய மனைவி அனந்தாயி (23). சங்கன் நேற்றிரவு அருகில் உள்ள உணவகத்தில் தனது மனைவி அனந்தாயிக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்துள்ளார்.

அந்த பரோட்டாவை வீட்டில் இருந்த கருவாட்டுக் குழம்புடன் அனந்தாயி சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அனந்தாயி வாந்தி எடுத்து மயங்கியுள்ளார். இதனையடுத்து உடனடியாக அனந்தாயியை அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

அங்கு அவருக்குத் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி அனந்தாயி உயிரிழந்தார். இதனையடுத்து அனந்தாயின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பரோட்டா சாப்பிட்டதால் அஜிரணக் கோளாறால் அனந்தாயி உயிரிழந்தாரா இல்லை வேறு ஏதேனும் காரணமா எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க :மீன் விற்கும் தாய்க்கு நடந்த அவமரியாதை: ஸ்டாலின் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details