விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தில், அனைத்து சமுதாய மக்களின் நல்லினக்கத்திற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் விருதுநகர், மதுரை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குழுவிற்கு 30 வீரர்கள் வீதம் களமிறங்கி காளைகளை அடக்கும் போட்டியில் பங்கேற்றனர்.