தமிழ்நாடு

tamil nadu

விருதுநகர் ஜல்லிக்கட்டுப் போட்டி: 350 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

By

Published : Feb 24, 2020, 6:11 PM IST

விருதுநகர்: நெடுங்குளம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களின் நல்லிணக்கத்திற்காக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள நெடுங்குளம் கிராமத்தில், அனைத்து சமுதாய மக்களின் நல்லினக்கத்திற்காக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் விருதுநகர், மதுரை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350 காளைகளும், 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். குழுவிற்கு 30 வீரர்கள் வீதம் களமிறங்கி காளைகளை அடக்கும் போட்டியில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் கட்டில், பீரோ, மிதிவண்டி, தங்கக்காசு,வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியின்போது பாதுக்காப்பு பணியில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பெண் குரலில் பேசி பணத்தைப் பறிக்க முயன்ற இளைஞர் கைது

ABOUT THE AUTHOR

...view details