தமிழ்நாடு

tamil nadu

விழுப்புரத்தில் தாய் மகள் மர்மமான முறையில் கொலை

By

Published : Dec 8, 2021, 6:21 AM IST

விழுப்புரத்தில் தாய் மகள் கொலை, Mother and daughter mysteriously murdered in Villupuram

விழுப்புரம் அருகிலுள்ள கலித்திரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தாய் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்மாவட்டம் கலித்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரோஜா (வயது 80), இவரும் மகள் பூங்காவனமும் (வயது 60) (டிச.6) தங்களுக்கு சொந்தமான வீட்டில் ரத்தக்கறையுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இதனையடுத்து அங்கு சென்ற கண்டமங்கலம் காவல்துறையினர், இறந்தவர்களின் உடலைக்கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நகைக்காகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

இதையும் படிங்க : செல்போனில் கேம் விளையாடியதைக் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details