தமிழ்நாடு

tamil nadu

’கணவர் உண்ணாவிரதத்தை கைவிட்டால்தான் நான் கைவிடுவேன்’ - நளினி திட்டவட்டம்

By

Published : Nov 2, 2019, 7:47 PM IST

Updated : Nov 2, 2019, 7:57 PM IST

வேலூர்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினியின் கணவர் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டால்தான் தானும் உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என்று நளினி கூறியதாக அவரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

covicts nalini murugan fasting at vellore jail

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியுடனும், மத்திய சிறையில் உள்ள அவரது கணவர் முருகனுடனும் வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி சிறையில் உள்ள நளினி கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில், இருவரையும் வழக்கறிஞர் புகழேந்தி சந்தித்து பேசினார்.

இருவரையும் சந்தித்த பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், "தங்களை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி எட்டாவது நாளாகவும், மத்திய சிறையில் உள்ள முருகன் 15ஆவது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர். இதனால் முருகன் மிகுந்த உடல் சோர்வுடன் காணப்படுகிறார்.

நளினியையும் முருகனையும் சந்தித்து பேசிவிட்டுவரும் வழக்கறிஞர் புகழேந்தி

நேற்று மாலை அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். தங்களது உயிரைக் காப்பாற்ற முதலமைச்சர் தலையிட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருவரும் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது முருகனை மருத்துவர்கள் பரிசோதித்து இன்று அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற வாய்ப்புள்ளது. மேலும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டால்தான், தானும் தனது உண்ணாவிரதத்தை கைவிடுவேன் என நளினி கூறியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:‘தனி அறை... உணவு கொடுக்காமல் சித்ரவதை..!’ - முருகன் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

Intro:வேலூர் மாவட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் முருகன் திடீர் மயக்கம் ; உண்ணாவிரதம் இருப்பதால் உடல் நிலை மோசம் -வழக்கறிஞர் புகழேந்தி பேட்டிBody:வேலூர் மாவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி மற்றும் மத்திய சிறையில் உள்ள முருகனுடன் அவர்களின் வழக்கறிஞர் புகழேந்தி இன்று சந்தித்து பேசினார். 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள தங்களை விடுதலை செய்யக்கோரி சிறையில் உள்ள நளினி கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வரும் நிலையிலும், முருகன் மீது செல்போன் பறிமுதல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையிலும் வழக்கறிஞர் சந்திப்பு நடைபெற்றது.

பின்னர் வழக்கறிஞர் புகழேந்தி அளித்த பேட்டியில், "தங்களை விடுதலை செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி 8-வது நாளாகவும், மத்திய சிறையில் உள்ள முருகன் 15 வது நாளாகவும் உண்ணாவிரதம் மேற்க்கொண்டுள்ளனர். முருகன் மிகுந்த உடல் சோர்வுடன் காணப்படுகிறார். நேற்று மாலை அவர் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இவர்கள் இருவரும் தற்போது தனிமை சிறையில் உள்ளனர். இவர்களின் உயிரை காப்பாற்ற தமிழக முதல்வர் தலையிட்டு விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். மேலும் முருகனை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர். இன்று அவருக்கு குளுகோஸ் ஏற்ற வாய்ப்புள்ளது. முருகனின் உண்ணாவிரதத்தை கைவிட்டால் தான் நளினியும் தனது உண்ணாவிரதத்தை கைவிட இருப்பதாக நளினி கூறியதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.Conclusion:
Last Updated :Nov 2, 2019, 7:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details