ETV Bharat / state

‘தனி அறை... உணவு கொடுக்காமல் சித்ரவதை..!’ - முருகன் முன்வைக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்

author img

By

Published : Oct 31, 2019, 5:27 PM IST

Updated : Nov 1, 2019, 4:18 PM IST

வேலூர்: சிறை வளாகத்திற்குள் தனக்கு நேர்ந்த அநீதிகள் தொடர்பாக ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

rajiv-gandhi-murder-case-accused-murugan-pressmeet

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன், அவரது மனைவி நளினி ஆகியோர் தனித்தனியே வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்துவருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் முருகன் தங்கியிருந்த அறையிலிருந்து ஆண்ட்ராய்டு செல்ஃபோன், சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில் முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக முருகனை இன்று சிறைக்காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்துவந்தனர். பின்னர் நீதிபதி நிஷா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து வழக்கு விசாரணை வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து முருகன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முருகன்

அப்போது முருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சிறையில் உண்மையாகவே என்னை தனிமைப்படுத்தியுள்ளனர். எனது உணவை எனக்குத் தரவில்லை. புரட்டாசி மாதம் 45 நாள்கள் நான் விரதம் இருப்பதால் பழம் மட்டும் சாப்பிட்டுவந்தேன். அதுவும் எனக்குத் தரப்படவில்லை. எனது பரோலை தடுக்கும் நோக்கில் செயல்படுகின்றனர்'' என்றார்.

தொடர்ந்து, சிறையில் நீங்கள் செல்ஃபோன் பயன்படுத்தியது உண்மையா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "சிறை அலுவலர்கள் நினைத்தால் யார் மீதும் எப்படி வேண்டுமானாலும் பழிபோடலாம். சிறை முழுவதும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் செல்ஃபோன் பயன்படுத்தவில்லை.

என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. குளிக்க முடியாமல், துணி துவைக்கவிடாமல் எதுவும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். 14ஆவது நாளாக நான் உண்ணாவிரதம் இருக்கின்றேன். அதையே மறைக்கிறார்கள். நான் முதலமைச்சருக்கு அளித்த மனுவை நான்கு நாள்களாக அனுப்பாமல் வைத்துள்ளனர். எனக்கு வெள்ளை தாள் கூட தர மறுக்கிறார்கள்'' எனக் சிறை அலுவலர்கள் மீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய முருகன்

இந்த வழக்கில் ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார். முருகன் மனைவி நளினி சமீபத்தில்தான் தனது மகள் திருமணத்துக்காக பரோலில் வெளிவந்துவிட்டு மீண்டும் சிறை சென்றார்.

இந்தச் சூழ்நிலையில் முருகன் தன்னை சிறை அலுவலர்கள் சித்ரவதை செய்வதாகப் புகார் கூறியிருக்கும் சம்பவம் வேலூர் சிறைத் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நளினி உண்ணாவிரதம் குறித்து பரபரப்பு தகவல்கள்!

Intro:வேலூர் மாவட்டம்

என்னை ரவுண்ட் கட்டி அட்டாக் செய்ய நினைக்கிறார்கள். எங்கள் விடுதலையை கெடுப்பதற்காக திட்டமிட்டு சதி செய்து என் மீது பழி சுமத்துகிறார்கள். நான் செல்போன் பயன்படுத்தவில்லை - வேலூர் சிறை நிர்வாகம் மீது முருகன் சரமாரி குற்றச்சாட்டு
Body:முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தனித்தனியே வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முருகன் தங்கியிருந்த அறையில் இருந்து ஆண்ட்ராய்டு செல்போன் சிம்கார்டு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் பாகாயம் காவல் நிலையத்தில
முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் இந்த வழக்கில் ஆஜராவதற்காக முருகனை இன்று சிறைக்காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி நிஷா முன்னிலையில் முருகன் ஆஜர்படுத்தப்பட்டார் வழக்கு விசாரணை மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து முருகன் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் முன்னதாக முருகன் சிறையில் தனக்கு கொடுமை நடைபெறுவதாக செய்தியாளர்களிடம் தனது ஆதங்கத்தக தெரிவித்தார். அவர் கூறுகையில், "சிறையில் உண்மையாகவே என்னை தனிமைப்படுத்தியுள்ளனர். எனது உணவை எனக்கு தரவில்லை என்றால் அதற்கு பெயர் கொடுமை தானே. புரட்டாசி மாதம் 45 நாட்கள் நான் விரதம் இருப்பதால் பழம் மட்டும் சாப்பிட்டு வந்தேன் அதையும் எனக்குத் தராமல் பிச்சை போட்டால் நான் எப்படி சாப்பிட முடியும்? என் உணவை எனக்கே பிச்சை போட்டால் எப்படி சாப்பிட முடியும்? உங்கள் தாய் உங்களுக்கு பிச்சை போட்டால் நீங்கள் சாப்பிடுவீர்களா? எனது பரோலை தடுக்கும் நோக்கில் தான் இதுபோன்று என்னை கொடுமைப்படுத்துகின்றனர் என்றார் தொடர்ந்து, சிறையில் நீங்கள் செல்போன் பயன்படுத்தியது உண்மாயா? என கேட்டதற்கு, அவர்கள் கொடுக்காமல் செல்போன் பயன்படுத்த முடியுமா? இதில் லாஜிக் இருக்கிறதா நீங்கள் யோசித்துப் பாருங்கள் அவர்கள்(சிறை அதிகாரிகள்) நினைத்தால் யார் மீதும் எப்படி வேண்டுமானாலும் பழி போடலாம். சிறை முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நான் செல்போன் பயன்படுத்தவில்லை அவர்கள் அனுமதி இல்லாமல் நாங்கள் மூச்சுக்கூட விட முடியாது" என்றார். சிறையில் உண்ணாவிரதம் இருக்குறீர்களா என கேட்டதற்கு, சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அதற்கு பெயர் பட்டினி தான். என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. குளிக்க முடியாமல், துணி துவைக்க விடாமல் எதுவும் செய்ய விடாமல் தடுக்கின்றனர் தனியறையில் வைத்து விட்டனர். 14-வது நாளாக நான் உண்ணாவிரதம் இருக்கின்றேன். அதையே மறைக்கிறார்கள். நான் முதல்வருக்கு அளித்த மனுவை 4 நாட்களாக அனுப்பாமல் வைத்துள்ளனர் எனக்கு வெள்ளை பேப்பர் கூட தர மறுக்கிறார்கள் நான் உணவு அருந்துவதாக தெரிவிப்பது பொய். என்னை இரத்தப் பரிசோதனை செய்தால் எல்லா உண்மையும் தெரிந்துவிடும் விடுதலையும் செய்யாமல் ஆன்மீகவாதியாகவும் வாழ விட மாட்டிக்கிறார்கள். அப்புறம் நாங்கள் என்ன தான் செய்ய வேண்டும் இதற்கு மேல் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் எப்படி. 45 நாட்களாக ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து வந்தேன். அதையும் திட்டமிட்டு தடுக்கிறார்கள் எனது ஆன்மீக பயணத்தையும் திட்டமிட்டு தடுக்கிறார்கள் ரவுண்ட் கட்டி என்னை அட்டாக் பன்ன நினைக்கிறார்கள் என்றார். இந்த வழக்கில் 7 பேர் சிறையில் இருக்கும்போது உங்களை மட்டும் குறிவைத்து கொடுமைப்படுத்த காரணம் என்ன என்று கேட்டதற்கு, " ஆரம்பத்திலிருந்தே எங்கள் பரோலுக்கு டிஐஜி எதிர்ப்பாக இருக்கிறார் எனது தந்தை உடல்நிலை மிக, மிக மோசமாக இருப்பதால் எனது மனைவி, நான் இருவரும் பரோலில் செல்ல மனு அளித்தோம் அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் இரண்டுபேரும் பரோலில் செல்வதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை யாரோ இதற்கு எதிராக சதி செய்கிறார்கள் அரசு எங்களுக்கு எதிர்ப்பில்லை எங்களுக்கு விடுதலைக்கும் அரசு எதிர்ப்பு இல்லை வேறு யாரையோ இவர்கள்( சிறை நிர்வாகம்) தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்துள்ளனர் என ஆதங்கத்துடன. தெரிவித்தார். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த நிலையில் ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருக்கிறார் முருகன் மனைவி நளினி சமீபத்தில் தான் தனது மகள் திருமணத்துக்காக பரோலில் வெளி வந்துவிட்டு மீண்டும் சிறை சென்றார் இந்த சூழ்நிலையில் முருகன் தன்னை சிறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாக புகார் கூறியிருக்கும் சம்பவம் வேலூர் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதுConclusion:
Last Updated :Nov 1, 2019, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.