தமிழ்நாடு

tamil nadu

கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்: விவசாயிகள் வேதனை

By

Published : Dec 4, 2020, 11:07 AM IST

திருவாரூர்: விடிய விடிய பெய்த கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கனமழையால் சேதமடைந்த பயிர்கள்
கனமழையால் சேதமடைந்த பயிர்கள்

புரெவி புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழையும் பெய்துவருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் நேற்று (டிச. 03) காலையில் தொடங்கிய மழையானது 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்துவருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

குறிப்பாக நன்னிலம் அருகேவுள்ள திருக்கொட்டாரம், வேலங்குடி, கமுகக்குடி, பழையாறு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய பெய்துவரும் கனமழையால் அந்தப் பகுதிகளிலுள்ள குளங்கள், வாய்க்கால்கள் நீர்நிலைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், வெள்ளம் வருவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதில் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

கனமழையால் சேதமடைந்த பயிர்கள்

இதனால், பொதுப்பணித் துறை அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நிரம்பி வழியும் காஞ்சி, செங்கை மாவட்ட நீர்நிலைகள்!

ABOUT THE AUTHOR

...view details