தமிழ்நாடு

tamil nadu

மீன் பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு: சோகத்தில் கிராம மக்கள்

By

Published : Nov 28, 2021, 10:28 AM IST

வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை

பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

திருவள்ளூர்:திருவள்ளூர் முழுவதும் பெய்துவரும் கனமழையின் காரணமாக நீர்நிலைகள் நிரம்பிவழிகின்றன. இந்த நிலையில் பூண்டி ஏரி தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

இந்த நிலையில் பட்டரைபெருமந்தூர் மாதா கோவில் பகுதியைச் சார்ந்த மீனவர் கட்டி என்கிற சண்முகம், இவர் வழக்கம்போல் நேற்று காலை (நவம்பர் 27) பட்டரைபெரும்புதூர் டோல்கேட் அருகே பூண்டி ஏரியில் மீன் பிடிப்பதற்காக காலை 7 மணி அளவில் படகில் சென்றுள்ளார்.

அதன்பின் சுமார் 9.30 மணி அளவில் பூண்டி ஏரி வழியாகச் சென்ற மீனவர் ஒருவர், யாரோ முழங்காலிட்டபடி தலைகுப்புற கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்துள்ளார். பின்னர் கிராமத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, ஏரிக்குச் சென்று பார்த்தபோது முழங்காலிட்ட நிலையில் மீனவர் சண்முகம் இறந்துகிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து காவல் துறையினருக்கும், மீனவர் சங்கத்திற்கும் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல் துறையினர் சண்முகம் உயிரிழப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையடுத்து மீனவர் சண்முகத்தின் உடல் உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. மீனவர் சண்முகத்தின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இதையும் படிங்க:தயார் நிலையில் இருங்கள்! - ஐஜிக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details