தமிழ்நாடு

tamil nadu

ரயிலுடன் ரன்னிங் ரேஸ் - மாணவ- மாணவிக்கு எஸ்.பி அறிவுரை

By

Published : Nov 25, 2021, 10:26 PM IST

மாணவ, மாணவிக்கு எஸ்பி அறிவுரை

கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணவ, மாணவியை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுரை வழங்கினார்.

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி செல்லும் புறநகர் ரயிலில், சீருடை அணிந்த பள்ளி மாணவி ஒருவர் ஓடி வந்து ஏறி தமது காலை நடைமேடையில் தேய்த்தபடியே சாகசத்தில் ஈடுபட்டார்.

அவருடன் பள்ளி சீருடை அணிந்த மாணவர் ஒருவரும் பயணித்து இதே போல ஓடும் ரயிலில் காலை நடைமேடையில் தேய்த்தபடியே பயணிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதில் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் நேரில் அழைத்து அறிவுரை வழங்கினார்.

இதையும் படிங்க:பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details