திருநெல்வேலி: கோபாலசமுத்திரத்தில் கடந்த வாரம் சாதி மோதல் காரணமாக அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் எட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அங்குப் பாதுகாப்புப் பணியின்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த காவலர் கபிலன் என்பவர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அஞ்சலி செலுத்தினார்.