தமிழ்நாடு

tamil nadu

டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

By

Published : Dec 14, 2022, 5:25 PM IST

Updated : Dec 14, 2022, 6:51 PM IST

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

டிராக்டர் மோதி பெண் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

தென்காசி:சங்கரன்கோவில் அருகேவுள்ள சரவணாபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர், கோபால கிருஷ்ணன். இவர் பாளையங்கோட்டையில் ஹெல்த் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். கோபால கிருஷ்ணன் அவரது மனைவி ஜெயாவும் சங்கரன்கோவிலில் உள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அப்போது, பனவடலிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே தண்ணீர் ஏற்றிச்செல்லும் டிராக்டர் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் கோபாலகிருஷ்ணனின் மனைவி ஜெயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பனவடலிசத்திரம் காவல் துறையினர் உயிரிழந்த ஜெயாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், டிராக்டர் ஓட்டுநர் கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சமூக ஆர்வலர் காசிமாயனிடம் வம்பு.. வழக்கில் சிக்கிய ரவுடி போலீஸ்!

Last Updated :Dec 14, 2022, 6:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details