தமிழ்நாடு

tamil nadu

அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. கணித ஆசிரியர் போக்சோவில் கைது

By

Published : Oct 19, 2022, 4:15 PM IST

சேலத்தில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கணித ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மாணவியிடம் அத்துமீறிய கணித ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவியிடம் அத்துமீறிய கணித ஆசிரியர் போக்சோவில் கைது

சேலம்:அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் கணித ஆசிரியர் சரவணகுமார் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் இந்திரா தீவிர விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் கணித ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

ABOUT THE AUTHOR

...view details