தமிழ்நாடு

tamil nadu

மதுரையில் மாடுகளை திருடி விற்பனை செய்த ஹரியானா இளைஞர்கள் கைது!

By

Published : Jan 23, 2023, 11:07 PM IST

Etv Bharat

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் மாடுகளை திருடி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் விற்பனை செய்த அரியானா மாநில இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை: மதுரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அடிக்கடி கால்நடைகள் களவு போவதாக காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், மதுரை கூடல் புதூர் காவல் நிலையம் அருகே இரும்பு தடுப்பு ஏற்படுத்தி காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, அப்பகுதியில் வந்த சரக்கு வாகனம் ஒன்று இரும்பு தடுப்புகளை இடித்துக் கொண்டு நிற்காமல் சென்றது. அதில், அங்கு காவலுக்கு இருந்த சார்பு ஆய்வாளர் தவமணி காயமடைந்தார். இதனையடுத்து, அந்த வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, தனிப்படை அமைத்து மிக தீவிரமாக தேடி வந்த நிலையில், கோசாகுளம்-குலமங்கலம் சாலையில் அக்குறிப்பிட்ட வாகனமும் அதிலிருந்து தப்பி ஓடிய மூவரை தவிர அதிலிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நாசிர் (23), இர்ஃபான் (26), ஜூபைர் (33), ஷெகுல் (23), ஹக்முதீன் (42) ஆகியோரை கைது செய்தனர்.

திருட்டுக்கு பயன்படுத்திய வாகனம்

பின்னர், அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் தப்பியோடிய மூவரை தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெளிநாட்டில் வேலை என பலரிடம் மோசடி; தாய் மீது மகன் ஆட்சியரிடம் புகார்!

ABOUT THE AUTHOR

...view details