தமிழ்நாடு

tamil nadu

தோவாளை சந்தையில் பூக்கள் விலை நிலவரம்!

By

Published : Dec 3, 2022, 6:58 PM IST

Etv Bharat

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்களின் விலை மூன்று மடங்காக உயர்வாக விற்பனையானது. தேவையை பொறுத்து பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி:தென் தமிழ்நாட்டில் முக்கிய மலர் சந்தைகளில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை. தோவாளை மலர் சந்தைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் பூக்களை விற்பனைக்க கொண்டு வருவது வழக்கம். இதைபோன்று இங்குள்ள பூக்கள் வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.

கடந்த சில நாள்களாக ஏற்பட்ட பணி பொழிவு மற்றும் மழை காரணமாக வெளி மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வரத்து குறைந்ததாலும், நாளை முகூர்த்த நாளாகவும் இருப்பதால்- பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 1500 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்ட மல்லிகை பூவானது 3500 ரூபாய்க்கும், 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சி இன்று 1500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்வு

இதேபோல முல்லை, ரோஜா, வாடாமல்லி, கிரேந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களும் விலையேற்றத்துடன் காணப்பட்டது. பூக்களின் விலை மூன்று மடங்கு விலை உயர்ந்தாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் பூ கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது.

இதையும் படிங்க:ஒரு கிலோ மல்லிகை பூ விலை ரூ 5000

ABOUT THE AUTHOR

...view details