தமிழ்நாடு

tamil nadu

நாடார் சமூகத்திற்கு எதிராக பேசிய பெண் பாதிரியார்; காவல் நிலையத்தில் புகார்

By

Published : Nov 23, 2021, 8:38 PM IST

நாடார் சமூகத்திற்கு எதிராக பேசிய பெண் பாதிரியார்

நாடார் சமூகத்திற்கு எதிராக பேசிய பெண் பாதிரியாரை கைது செய்யக் கோரி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் செயல்பட்டு வரும் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று முன்தினம் (நவ.21) ஆராதனை ஜெப கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தாம்பரத்தை சேர்ந்த பியூலா செல்வராணி பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து பேசினார்.

அப்போது நாடார் சமுதாயம் குறித்தும் இழிவாக பேசினார். இதையடுத்து அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன் பியூலா செல்வராணியை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நாடார் சமூகத்திற்கு எதிராக பேசிய பெண் பாதிரியார்

நாடார் சமூகத்திற்கு எதிராக பேச்சு

மேலும் இதனை கண்டிக்காத சிஎஸ்ஐ சர்ச் போதகர் சாமுவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:சென்னை மசாஜ், ஸ்பா மையங்களில் பாலியல் தொல்லை? அதிரடி சோதனையில் சிலர் கைது

ABOUT THE AUTHOR

...view details