சென்னை மசாஜ், ஸ்பா மையங்களில் பாலியல் தொல்லை? அதிரடி சோதனையில் சிலர் கைது

author img

By

Published : Nov 22, 2021, 8:41 AM IST

Updated : Nov 22, 2021, 8:55 AM IST

மசாஜ், ஸ்பா சென்டர்களில் காவல்துறையினர் நடத்திய சோதனை தொடர்பான காணொலி

சென்னை முழுவதும் 151 மசாஜ், ஸ்பா மையங்களில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், கீழ்ப்பாக்கத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிலர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: சென்னையில் பலர் உரிய அனுமதி பெற்று மசாஜ், ஸ்பா மையங்கள் உள்ளிட்டவற்றை நடத்திவருகின்றனர். இதில் சில கும்பல்கள் எந்த ஒரு உரிமும், பயிற்சியும் பெறாமல் சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடத்துவதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று (நவம்பர் 21) சென்னை மாநகரம் முழுவதும் 151 மசாஜ், ஸ்பா மையங்களில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். தி. நகரில் இருபது, கீழ்ப்பாக்கத்தில் ஆறுக்கும் மேற்பட்ட இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில் கீழ்ப்பாக்கம் பிளவர் தெருவில் மசாஜ் சென்டர் என்னும் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களை, துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலானோர் கைதுசெய்தனர்.

சில நாள்களுக்கு முன்னர் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் சரவணன், ஷாம் வின்சன்ட் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் சோதனை நடத்தினர்.

இருவர் மீதும் பாலியல் தொழில் இடைத்தரகர்களிடம் கையூட்டுப் பெற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மசாஜ், ஸ்பா சென்டர்களில் காவல்துறையினர் நடத்திய சோதனை தொடர்பான காணொலி

இதையும் படிங்க: காவல் நிலையம் வரைவந்த அந்த உறவு.. கையை கிழித்துக் கொண்ட பெண்.. திருவொற்றியூரில் ஷாக்!

Last Updated :Nov 22, 2021, 8:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.