தமிழ்நாடு

tamil nadu

மருத்துவ கல்லூரி, மாவட்ட வருவாய்த் துறைக்கு வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி : தொடங்கி வைத்த சட்டத்துறை அமைச்சர்!

By

Published : Oct 16, 2020, 2:53 PM IST

கள்ளக்குறிச்சி: மருத்துவ கல்லூரி, மாவட்ட வருவாய்த் துறைக்கு சுமார் ஒரு கோடியே 5 லட்சம் மதிப்பிலான வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

vehicle-delivery-function-in-kallakuruchi
vehicle-delivery-function-in-kallakuruchi

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கிரன் குராலா தலைமையில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்கு இரண்டு அவசரகால ஊர்திகளும், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கு எட்டு வாகனங்களையும் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கலந்துகொண்டு வாகனங்களை வழங்கி அதன் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கட்டபொம்மனின் தியாகத்தை நினைவு கூர்வோம் - ஓபிஎஸ்!

ABOUT THE AUTHOR

...view details