தமிழ்நாடு

tamil nadu

உளுந்தூர்பேட்டையில் தீ விபத்து - மூன்று கூரை வீடுகள் தீயில் கருகி நாசம்!

By

Published : Feb 5, 2021, 10:50 PM IST

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே மின்கசிவு ஏற்பட்டு அடுத்தடுத்து மூன்று கூரை வீடுகள் தீப்பற்றி எரிந்து 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.

uluntherpettai_house_fire
uluntherpettai_house_fire

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான வெங்கடேசன் என்பவரின் வீடு மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இந்தத் தீயானது வேகமாக பரவி ராஜி மற்றும் வெள்ளையன் ஆகியோரின் வீட்டை பதம் பார்த்தது. இதில், இருவரின் வீடுகளும் தீப்பற்றி எரிந்தன.

இது குறித்து, தகவலறிந்து வந்த உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தானியப் பொருள்கள் தீயில் கருகின.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பழங்குடி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆம்புலன்சில் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர்!

ABOUT THE AUTHOR

...view details