தமிழ்நாடு

tamil nadu

பறக்கும் படை அதிகாரிகள் சோதனை - ரூ. 3.40 லட்சம் பறிமுதல்

By

Published : Sep 23, 2021, 8:00 AM IST

ரூ. 3.40 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் புறவழிச்சாலையில் தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற அழகாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜோலின் என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற எரவார் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரிம் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 1.40 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க : கிராம பஞ்சாயத்தை பொது பிரிவினருக்கு அறிவிக்கக் கோரி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details