தமிழ்நாடு

tamil nadu

நடத்துனருக்கு குத்து விட்ட பயணி கைது

By

Published : Feb 17, 2020, 5:20 PM IST

ஈரோடு: குடிபோதையில் பேருந்தின் ஓட்டுநரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய பயணியை தற்போது காவல் துறையினர் கைது செய்தனர்.
பயணி
பயணி

ஈரோட்டில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து காவிலி பாளையத்துக்கு 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு நகர்ப்புற பேருந்து நேற்று புறப்பட்டது.

இந்தப் பேருந்தின் நடத்துனரான ரமேஷ், பயணிகளுக்கு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் பயணித்த பயணி கனகராஜ் டிக்கெட் வழங்கும் நடத்துனர் ரமேஷிடம் தகராறில் ஈடுபட்டார். இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட அரியப்பம்பாளையம் பெரியூர் சந்திப்பில் பேருந்து நிறுத்திவிட்டு பயணியிடம் ரமேஷ் டிக்கெட் கேட்டுள்ளார். இதில், ஆத்திரமடைந்த கனகராஜ் நடத்துனரை தாக்கியுள்ளார்.

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல் துறையினர், குடிபோதையிலிருந்த கனகராஜை பிடித்து விசாரிக்கும்போது அவர் தப்பியோடிவிட்டார். இதையடுத்து, அவரை தீவிரமாக தேடி வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர், தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details