தமிழ்நாடு

tamil nadu

சசிகலாவை வடிவேலுவோடு ஒப்பிட்டுப்பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

By

Published : Sep 16, 2022, 9:34 PM IST

’சசிகலா ஒரு முடிந்துபோன சகாப்தம்...!’ - முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

'சசிகலா முடிந்து போன சகாப்தம்; நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என வடிவேல் கூறுவது போல் நானும் பொதுச்செயலாளர் தான் எனக் கூறி வருகிறார், சசிகலா. அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியுள்ளார்.

திண்டுக்கல்:தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை உயர்த்தியற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் இன்று (16.09.22) திண்டுக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் அடுத்துள்ள பொன்னகரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக கிழக்கு மாவட்டச்செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சசிகலாவைப் பொறுத்தவரை அது முடிந்து போன சகாப்தம். அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து பதில் கூறி எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

’நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்...!’ என வடிவேல் சொல்வது போல் நானும் பொதுச்செயலாளர் எனக் கூறி வருகிறார், சசிகலா. அதிமுக கட்சிக்காரர்களோ, பொதுமக்களோ அந்த அம்மாவை பற்றி நினைக்கக் கூட நேரமில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டு இருந்திருந்தால் ஓபிஎஸ்க்கு மரியாதை இருந்திருக்கும் - ஜெயக்குமார்

ABOUT THE AUTHOR

...view details