தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானல் ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா

By

Published : Sep 6, 2021, 10:10 AM IST

kodaikanal-union-members-staged-protest-in-meeting
கொடைக்கானல் ஒன்றிய உறுப்பினர்கள் தர்ணா ()

கொடைக்கானல் ஒன்றியக்குழு கூட்டத்தில், ஒன்றிய உறுப்பினர்களுக்கு அவரவர் ஊராட்சிக்குள் அலுவலக அறை அமைத்து கொடுக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்துவதாக உறுப்பினர்கள் தர்ணா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள கட்டார் வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டமானது நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கொடைக்கானல் ஒன்றிய ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், தலைவர், துணை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.

ஒன்றிய உறுப்பினர்களுக்கு அவரவர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தனி அறைகளை அமைத்து தரரவேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், நடைபெற்ற ஊராட்சி குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குழு கூட்டத்தின் முடிவில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தின்போது, அலுவலர்கள் சரிவர பதிலளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?

ABOUT THE AUTHOR

...view details