தர்மபுரி நான்கு ரோடு சந்திப்பு அருகே இளைஞர் ஒருவர் அரசாங்க வேலை கொடுத்து பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறி சாலையில் அமர்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து காவல் துறையினர் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த காவேரி என்பது தெரியவந்து. கூலி தொழிலாளியான இவர் மதுபோதையில் தர்ணாவில் ஈடுபட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.