தமிழ்நாடு

tamil nadu

சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது - பெற்றோர் தலைமறைவு

By

Published : Jul 19, 2021, 11:45 AM IST

சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிறுமியின் பெற்றோரை தேடி வருகின்றனர்.

சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது
சிறுமியை கட்டாய திருமணம் செய்த இளைஞர் கைது

சென்னை: வண்ணாரப்பேட்டையில் 16 வயது சிறுமியை அவரது பெற்றோர் உறவினருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த மே மாதம் ஆந்திராவில் உள்ள வாய் பேச முடியாத அகிலகுண்ட ரமேஷ் (24) என்பவருடன் சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமணம் குறித்த தகவல் சென்னை மாவட்ட சமூக நல அமைப்பினருக்கு கிடைத்தது. இதனையடுத்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை செய்து, சிறுமியை மீட்டனர்.

மேலும் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்சோவில் கைது செய்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் சிறுமியின் பெற்றோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கணவர் மீது மனைவி புகார்- சொத்து பிரச்னையா? போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details