தமிழ்நாடு

tamil nadu

CCTV:பார்சல் சர்வீஸ் கடையில் போதையில் இருவர் தகராறு - ஊழியரைத் தாக்கும் காட்சி

By

Published : Oct 2, 2022, 6:29 PM IST

Etv Bharat சிசிடிவி காட்சி

சென்னை பெரியமேடு பகுதியில் பார்சல் சர்வீஸ் கடையில் உள்ள மூட்டைகளை போதையில் வந்த இருவர் எடுக்க முயன்றனர். அதனைத் தடுக்க வந்த ஊழியரை, போதை ஆசாமிகள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை: பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவில் ரிஸ்வான் என்பவர், பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதியில் இருந்து பார்சல்களை ரயில் மூலமாக அனுப்பும் பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு (அக்.02) லாரி ஒன்றில் வந்த பார்சல்களை ஊழியர்கள் இறக்கி கொண்டிருந்தனர். அப்போது, போதையில் வந்த இருவர், மாமூல் கேட்டதாகவும், இல்லை என்றதும் அங்கிருந்த பார்சலை எடுக்கமுயன்றதாகவும் கூறப்படுகிறது.

அதனைத்தடுத்த வடமாநில ஊழியர் ஒருவரை இருவரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுகுறித்து ரிஸ்வான் காவல் கட்டுபாட்டு அறைக்குத்தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெரியமேடு காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

இதையும் படிங்க:சிசிடிவி: சென்னையில் மளிகைக் கடையை உடைத்து ரூ.87 ஆயிரம் திருட்டு

ABOUT THE AUTHOR

...view details