சிசிடிவி: சென்னையில் மளிகைக் கடையை உடைத்து ரூ.87 ஆயிரம் திருட்டு

author img

By

Published : Oct 2, 2022, 1:18 PM IST

Etv Bharat

சென்னை அம்பத்தூரில் நள்ளிரவில் மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.87 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை: அம்பத்தூர் அருகே ஒரகடம், கே.கே.சாலை பகுதியில் உள்ள ராஜன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் நள்ளிரவில் கதவை உடைத்து ரூ.87 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. அதனை காலையில் கடை திறக்கும்போது அறிந்த ராஜன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

சிசிடிவி: சென்னையில் மளிகைக் கடையை உடைத்து ரூ.87 ஆயிரம் திருட்டு

இதனிடையே கடையின் சிசிடிவி காட்சிகளில், 2 பேர் நள்ளிரவில் கையில் இரும்பு ராடு கொண்டு வந்து கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், பின் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.87 ஆயிரம் பணத்தை திருடுவதும் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவியின அடிப்படையில் அம்பத்தூர் T1 போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வீடியோ: 600 கிலோ வெடிப்பொருள்... 6 வினாடிகள்... சாந்தினி சவுக் பாலம் தகர்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.