தமிழ்நாடு

tamil nadu

உடல் நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் அனுமதி!

By

Published : Oct 2, 2022, 3:57 PM IST

உடல் நலக்குறைவு காரணமாக ஆர்.நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் சிகிச்சை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணுவுக்கு (97). இவர் நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் நேற்று மாலை 6.15 மணியளவில் அவர் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சல் மற்றும் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இவரது உடல் நலம் குறித்து மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, 'நல்லகண்ணுவின் உடல்நிலை சீராகவுள்ளதாகவும், பொதுப்பிரிவு மருத்துவர்கள், சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், கரோனா, டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளதா எனப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவக்குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்’எனவும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நல்லகண்ணுவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதையும் படிங்க:மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி - டிஜிபி தொடங்கி வைப்பு

ABOUT THE AUTHOR

...view details