சென்னை: அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர், வடிவேல். இவர் ஞானமூர்த்தி நகர் விரிவாக்கம் பகுதியில் ஸ்ரீமயி பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று (மே 12) இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிறந்தநாள் பார்ட்டி நிகழ்ச்சிக்கு 25 நோட்டுப் புத்தகங்கள், பென்சில் போன்ற பொருள்கள் வாங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
உடனே கடையின் உரிமையாளர் பொருள்களை எடுக்கத் தொடங்கினார். பின்னர், புத்தகங்கள் வாங்க வந்தவர் கையில் பணம் இல்லை எனவும்; ஏடிஎம்-க்கு சென்று வருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். பின்னர், உரிமையாளர் மேஜையைப் பார்த்தபோது அங்கிருந்த செல்போன் காணாமல் போயிருந்தது. ஏடிஎம் சென்ற நபரும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தார்.