தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் அதிகரிப்பு - ஏர்பஸ் ஏ-380 வந்து செல்ல ஏற்பாடு

By

Published : Sep 19, 2022, 7:34 PM IST

Etv Bharat
Etv Bharat

சென்னை விமான நிலையத்தில் உள்ள முதல் ஓடுபாதையின் நீளம் மேலும் 400 மீட்டர் அதிகரிக்கப்படுகிறது. இதனால் ஓடுபாதையின் நீளம் 4.058 கிலோ மீட்டராகிறது.

சென்னைசர்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையம் தற்போது ஆயிரத்து 350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் சென்னையில் விமானங்களின் எண்ணிக்கை, பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

எனவே, உள்நாடு மற்றும் சர்வதேச விமான முனையங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நவீன விமான முனையம் 2ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணி நடந்து வருகிறது. சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பல்லாவரம் மற்றும் பரங்கி மலை பகுதியில் 21.24 ஏக்கர் நிலம் விமான நிலைய ஆணையத்திடம் வழங்கப்பட்டது.

விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் அதிகரிப்பு

அதில் 10.20 ஏக்கா் நிலத்தை பயன்படுத்தி சென்னை விமான நிலைய ஓடுபாதைகள் விரிவாக்கம் செய்யப்படவிருக்கிறது. இது குறித்து சென்னை விமான நிலைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன.

விமான நிலையத்தின் ஓடுபாதையின் நீளம் அதிகரிப்பு

முதல் ஓடுபாதை 3ஆயிரத்து 658 மீட்டர் நீளம், 45 மீட்டா் அகலம் உள்ளது. இரண்டாவது ஓடுபாதை 2ஆயிரத்து 890 மீட்டர் நீளம், 45 மீட்டர் அகலம் உடையது. இதில் முதல் ஓடுபாதையின் நீளத்தை மேலும் 400 மீட்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால், முதல் ஓடுபாதை 4ஆயிரத்து 58 மீட்டர் உடையதாக மாறும்.

மேலும், பரங்கிமலைப் பகுதியில் விமானங்கள் ஓடுபாதையில் தரையிறங்கும்போது விமானிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் ஒளி அமைப்புவசதிகள், நவீன கருவிகள் ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் சிரமங்கள் இருக்காது. அதோடு முக்கியமாக பெரிய ரக விமானமான ஏர் பஸ் A-380 ரக விமானங்கள், இதுவரை சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கவில்லை.

ஏர்பஸ் ஏ-380

அந்த விமானம் மூன்று அடுக்குகளுடன் 746 இருக்கைகள் உடையது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில் மட்டுமே, அந்த விமானங்கள் வந்து தரையிறங்கும் வசதி உள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளின் நீளம் குறைவாக இருப்பதால் அதைப்போன்ற பெரிய ரக விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமங்கள் உள்ளன.

ஏர்பஸ் ஏ-380

ஆனால், தற்போது சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதை நீளம் அதிகரிக்கப்படுவதால் ஏா்பஸ் A-380 ரக பெரிய விமானங்கள் வந்து தரையிறங்கி புறப்பட்டுச் செல்ல முடியும்’ என சென்னை விமான நிலைய அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க சிசிடிவி - யுஜிசி அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details