தமிழ்நாடு

tamil nadu

‘கைகளை இழந்தவருக்கு, மாற்றுக் கைகளைச் சேர்த்ததற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறப்பு விருது’ -  விஜய பாஸ்கர்

By

Published : Dec 1, 2019, 3:33 PM IST

health-minister-vijayabhaskar-pressmeet-in-chennai
health-minister-vijayabhaskar-pressmeet-in-chennai

சென்னை: 10ஆவது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் தமிழ்நாடு பல்வேறு விருதுகளை வென்று மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற 10ஆவது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக முதலிடம் பெற்றமைக்கான விருதினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் விருதினைப் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘தொடர்ந்து 5ஆவது முறையாக இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து விருது பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனை சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனை என்ற அடிப்படையில் கூடுதலாக இன்னொரு விருதும் பெற்றுள்ளோம்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர்

அதை தொடர்ந்து இந்தியாவிலே குறிப்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைளை இழந்த நாராயணசாமிக்கு மாற்று கைகளைச் சேர்த்ததற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறப்பு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில் இருக்கிறது.

மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கை-மாற்று அறுவை சிகிச்சை செய்த நாராயணசாமியே குத்துவிளக்கேற்றி அந்த விழாவினை தொடக்கி வைத்தார். அது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கி அவர்களுக்கும் அந்த பயிற்சி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க: மகனுக்காக சிறுநீரகம் தானம் செய்த தந்தை

Intro:சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:டெல்லியில் 10-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக முதலிடம் பெற்றமைக்கான விருதினை மாண்புமிகு தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் விருதினைப் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்

தொடர்ந்து 5வது முறையாக இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு மத்திய அரசிடமிருந்து இந்த விருது கிடைத்திருக்கிறது.

ஐந்தாவது முறையாக மிகப்பெரிய பெருமை அதோடு மட்டுமல்லாமல் உடல் உறுப்பு தானம் அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செய்யக்கூடிய மருத்துவமனை சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை என்ற அடிப்படையில் கூடுதலாக இன்னொரு விருதும் வழங்கப்பட்டது.

அதை தொடர்ந்து இந்தியாவிலே குறிப்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு கைளை இழந்த நாராயனசாமிக்கு மாற்று கைகளை சேர்த்துதற்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிறப்பு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.
தமிழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் அரசுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் இருந்தது.

மேலும் பெருமை சேர்க்கும் விதமாக கை-மாற்று அறுவை சிகிச்சை செய்த நாராயணசாமியே குத்துவிளக்கேற்றி அந்த விழாவினை தொடக்கி வைத்தார் அது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசும்போது தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.மேலும் மற்ற மாநிலங்களுக்கு,
உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் ட்ரைனிங் சென்டர் ஆக அமைத்து மற்ற மாநிலங்கள் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் அனுமதி வழங்கி அவர்களுக்கும் அந்த பயிற்சி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என இவ்வாறு கூறினார்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details