தமிழ்நாடு

tamil nadu

போலந்து நாட்டில் மோசமான வானிலையின் காரணமாக விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

By

Published : Jul 18, 2023, 12:31 PM IST

போலந்து நாட்டில் மோசமான வானிலை காரணமாக, சிறிய ரக விமானம், விமானங்கள் நிறுத்தும் இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய சம்பவத்தில், 5 பேர் உயிரிழந்தனர்.

போலந்து நாட்டில் மோசமான வானிலையின் காரணமாக விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!
போலந்து நாட்டில் மோசமான வானிலையின் காரணமாக விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!

வர்ஷா: போலந்து நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, செஸ்னா 208 ரக சிறிய விமானம், ஸ்கை டைவிங் மையத்தில் உள்ள விமான நிறுத்தும் இடத்தில் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போலந்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள சிர்சைனோ (Chrcynno) என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானத்தின் விமானி மற்றும் விமானங்கள் நிறுத்தும் இடத்தில் தஞ்சம் அடைந்து இருந்த 4 பேர் உயிரிழந்ததாக தீயணைப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் மோனிகா நோகோவ்ஸ்கா-பிரைண்டா தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Meteorite: மொட்டை மாடியில் காஃபி குடித்த பெண்... விடாமல் விரட்டிய விண்கல்!

காயம் அடைந்த 8 பேரில், 2 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தில், ஒரு குழந்தையும் காயம் அடைந்து உள்ளதாக, அம்மாகாண ஆளுநர் சில்வெஸ்டர் டப்ரவுஸ்கி தெரிவித்து உள்ளார். தலைநகர் வர்ஷாவின் வடமேற்குப் பகுதியில் 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிர்சைனோ பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள், நோவி வோர் மஜோவெய்க்கி பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: Threads: த்ரெட்ஸ் செயலியின் தினசரி பயன்பாடு 50% வரை குறைவு - ஷாக்கிங் டேட்டா!

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இன்னும் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என்று, தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் கட்டார்ஜைனா அர்பனோவ்ஸ்கா தெரிவித்து உள்ளார். விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

போலந்து நாட்டின் ஸ்கை டைவிங் மையத்தில் நிகழ்ந்து உள்ள இரண்டாவது மோசமான விபத்து இது ஆகும். 2014ஆம் ஆண்டில், தெற்குப்பகுதியில் ஜெஸ்டோசோவா நகரத்தின், டொபொலோவ் பகுதியில் நிகழ்ந்த சிறிய ரக விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உணவு தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நிறுத்தம் ரஷ்யா... உலகளாவிய உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details