திருநெல்வேலி: டவுன் வழியாக சென்ற அரசு புறநகர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். சக பயணிகள் மாணவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அந்த மாணவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீகாந்த் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.