தமிழ்நாடு

tamil nadu

தலைவர் 169 - ஜெயிலர்: ஒரே கட்டமாக படப்பிடிப்பு - ஆட்டத்திற்கு தயாராகும் ரஜினி

By

Published : Jun 17, 2022, 11:51 AM IST

நடிகர் ரஜினியின் 169ஆவது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒரே கட்டமாக முடிக்க திட்டம்
ஒரே கட்டமாக முடிக்க திட்டம்

சிவா இயக்கத்தில் ‛அண்ணாத்த' படத்தில் நடித்த ரஜினி அதனையடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இப்படத்திற்கு 'ஜெயிலர்' என பெயரிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக தான் நடித்த படங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் இந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார், ரஜினி.

இப்படத்தின் திரைக்கதையை எழுத தனது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரை நியமித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராய், சிவகார்த்திகேயன், சிவராஜ்குமார், கே. எஸ்.ரவிக்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஜூலை மாதம் இறுதியில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை மூன்று மாதங்களில் நடித்து முடிக்கவும் ரஜினி திட்டமிட்டுள்ளார்.

அதன் காரணமாக இப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளிடமும் மூன்று மாதத்திற்கு மொத்தமாக கால்சீட் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:திரையுலக பிரபலங்கள் பாராட்டில் 'சுழல் தி வோர்டெக்ஸ் '!

ABOUT THE AUTHOR

...view details