தமிழ்நாடு

tamil nadu

தாயை துன்புறுத்திய தந்தை…தந்தையை வெட்டி கொன்ற 15 வயது மகன்..தூத்துக்குடியில் பகீர்! - Son Murders Father

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 22, 2024, 7:30 PM IST

THOOTHUKUDI CRIME: தூத்துக்குடியில் மது போதையில் தாயை துன்புறுத்தியதால் ஆத்திரமடைந்த 15 வயது சிறுவன் தந்தையை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

THOOTHUKUDI CRIME
THOOTHUKUDI CRIME

தூத்துக்குடி:தூத்துக்குடி செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி அனுசியா. இவர்களுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் உள்ளனர். சமையல் வேலை செய்து வரும் சத்தியமூர்த்தி தினமும் மது அருந்திவிட்டு தனது மனைவி அனுசுயாவை அடித்து துன்புறுத்துவடன் குழந்தைகளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று நேற்று இரவும் சத்தியமூர்த்தி மது போதையில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, வழக்கம் போல சத்தியமூர்த்தி தனது மனைவி அனுசியாவை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த அவரது மூத்த மகனான 15 வயது சிறுவன் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து தந்தை சத்தியமூர்த்தியை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல்துறையினர் தந்தையை கொலை செய்த 15 வயது சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மது போதையில் தாயை தந்தை துன்புறுத்தியதால், ஆத்திரமடைந்த சிறுவன் தந்தையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 7,600 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள்.. பள்ளி வாரியாக சேர்க்கை விவரங்களை அறிவது எப்படி? - Rte Application

ABOUT THE AUTHOR

...view details