கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்:46 ஜோடி மாடுகள் பங்கேற்பு..!

By

Published : Jul 6, 2022, 8:37 PM IST

thumbnail

சிவகங்கை: காரைக்குடி கழனிவாசல் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 46 ஜோடி மாடுகள் பங்கேற்றது. பூஞ்சிட்டு மாட்டிற்கு 5 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாட்டிற்கு 8 கிலோமீட்டர் தூரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதல் பரிசாக பூஞ்சிட்டு மாட்டிற்கு ரூ.19,001 சின்ன மாட்டிற்கு பரிசாக ரூ.10,001 பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.