தனித்தீவான பட்டாபிராம்; மிதவைகள் மூலம் பொதுமக்கள் பயணம்!
சென்னை புறநகர்ப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியுள்ளது. அதனை மாநகராட்சி நிர்வாகம் மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் அத்தியாவசிய தேவைக்கு செல்வோர் தெர்மாகோல் சீட் மூலம் மிதவைகளை தயார் செய்து அதில் சென்று வருகின்றனர்.