ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ் பெற்ற ஆண்டாள் கோயிலில் கடந்த டிச.23ஆம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி ஜன.2 அதிகாலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST