கீழ்பென்னாத்தூரில் உள்ள 41 அடி காளிசக்தி பீடம் கோயிலில் மஹா சண்டி ஹோமம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 1:01 PM IST

thumbnail

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த புதுப்பூண்டி தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள 41 அடி உயரம் கொண்ட ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன் காளிசக்தி பீடம் கோயிலில், மார்கழி அமாவாசையை முன்னிட்டு, மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, அபிஷேகத்துடன் மஹா கலச பூஜையும் நடைபெற்றது. 

முன்னதாக மங்கல இசை விக்னேஸ்வரா பூஜை, கும்ப அலங்காரம், கோபூஜை, முதலாம் யாக வேள்வி பூஜை, இரண்டாம் யாக வேள்வி பூஜை, மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்பு, ஸ்ரீ காளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரியம்மன் காளி சக்தி பீடத்திற்கு கலச புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. 

இதில் செவரப்பூண்டி மற்றும் கீழ்பென்னாத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதையும் படிங்க: குண்டர் சட்டத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு தான் காரணம்.. விவசாயி அருள் ஆறுமுகம் குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.