சத்தியமங்கலம் நெடுஞ்சாலையை சர்வசாதாரணமாக கடந்து செல்லும் சிறுத்தை... வாகனஓட்டிகள் பீதி!

By

Published : Aug 19, 2023, 1:26 PM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுத்தை யானை உள்ளிட்ட வனவிலங்குகள் திம்பம் மலைப்பாதை சாலையை கடந்து செல்வது வழக்கமாக உள்ளது. 

இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட். 19) அதிகாலை சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில், திம்பம் மலைப்பாதை வளைவு அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய சிறுத்தை சாலையின் நடுவே சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகி உள்ளது. அப்போது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் சாலையில் சென்ற சிறுத்தையை கண்டு அச்சமடைந்தனர். சிறிது நேரம் சாலையில் சென்ற சிறுத்தை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. 

அப்போது வாகன ஓட்டிகள் தங்களது செல்போன்களில் சிறுத்தை நடமாட்டத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் திம்பம் மலைப்பாதை சாலையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.