அண்ணாமலை நடைப்பயணம் மாற்றத்தை ஏற்படுத்துமா? - மாஜி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரியாக்‌ஷன் என்ன?

By

Published : Aug 8, 2023, 7:50 AM IST

thumbnail

ஈரோடு: சத்தியமங்கலம் பேருந்து நிலைய வளாகத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் அவசர கதியில் வழங்கப்பட்டுள்ளது. பள்ளியில் கடந்த ஆண்டுகளில் எத்தனை வழங்கப்பட்டது என தெரிந்து வழங்கினால் நன்றாக இருக்கும். பள்ளியில் எத்தனை மாணவர்கள் பயில்கிறார்கள் என கணக்கிட்டு சைக்கிள்களை வழங்காமல், வரப்பெற்ற குறைந்த அளவு சைக்கிள்களை வைத்து அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்காமல் குறைவான மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வை பொறுத்தவரை கடந்த அதிமுக ஆட்சியில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் அதிக அளவில் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றனர். டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைந்து போராட்டம் நடத்தியது குறித்து ஏற்கனவே ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலருடைய கருத்து. ஆனால் அதற்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.