Watch Video: கர்நாடகாவில் பெண்ணின் உயிரை காத்த ரயில்வே காவலர்
கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் உள்ள ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் தனது உறவினரை ரயில் ஏற்ற வந்தார். ரயில் பெட்டியில் ஏறி வழி அனுப்பிய அவர் ஓடும் ரயிலிருந்து கீழே இறங்க முயற்சித்த போது தவறி விழுந்தார். தண்டவாளத்தில் விழ இருந்த அவரை ரயில்வே காவலர்களான ஜகதீஷ், சந்தோஷ், அண்ணப்பா ஆகியோர் காப்பாற்றியுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.