பல விருதுகளை வாங்கிய ராஜா உயிரிழப்பு... குவிந்த போலீஸ் பட்டாளம்!
அமராவதி: ஆந்திராவில் கிருஷ்ணா மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றும் ராஜா நாய், உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. ராஜா இறுதிச்சடங்கில் காவல் ஆணையர், துணை காவல் ஆணையர் என மொத்த போலீஸ் பட்டாளமும் மாஸ்க் அணிந்தபடி கலந்துகொண்டனர். பல தேசிய, சர்வதேச, மாநில விருதுகளையும் ராஜா நாய் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.