ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு...!

author img

By

Published : Apr 19, 2019, 3:57 PM IST

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

விருதுநகர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டு அவற்றுக்கு 5 அடுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்துள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் 1,671 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்தனர். இதையடுத்து வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தனியார் கலைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பார்வையிட்டார். அதன்பின்பு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது.

மேலும் வருகிற மே 23ஆம் தேதி வரை ஐந்தடுக்கு பலத்த பாதுகாப்பு இந்த மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:விருதுநகர்
19-04-19

வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரங்கள்



Body:தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

விருதுநகர் வாக்குப்பதிவு முடிவடைந்த பிறகு இயந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் இதையடுத்து வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தனியார் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தனியார் கலைக் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் 1671 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது அதைத்தொடர்ந்து இன்று அந்த வாக்குச் சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது விருதுநகரில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமும் தனியார் கலைக் கல்லூரியில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவஞானம் பார்வையிட்டார் அதன்பின்பு மையங்களுக்கு பூட்டு போட்டு சீல் வைக்கப்பட்டது மேலும் வருகிற மே 23 வரை ஐந்தடுக்கு பலத்த பாதுகாப்பு இந்த மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.