ETV Bharat / state

லாரிகள் மோதி விபத்து: இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த ஓட்டுநர்!

author img

By

Published : Jan 13, 2020, 3:01 PM IST

லாரிகள் மோதிய விபத்து
லாரிகள் மோதிய விபத்து

விருதுநகர்: மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஓட்டுநர் ஒருவர் லாரியின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார்.

விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி லாரியின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டார்.

பின்னர், இதனைக்கண்ட பொதுமக்கள் நத்தம்பட்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கடப்பாறை, கம்பி போன்றவற்றைக்கொண்டு லாரியின் முகப்பை உடைத்து மகேந்திரமணியை மீட்டனர்.

லாரிகள் மோதிய விபத்து

இதைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய இரண்டு ஓட்டுநர்களையும் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தால் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Intro:விருதுநகர்
13-01-2020

2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Tn_vnr_01_lorry_accident_vis_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நள்ளிரவில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி. மதுரை முதல் கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அழகாபுரி பகுதியில் மதுரை முதல் கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் ராஜபாளையத்திலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும் விருதுநகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர்கள் மகேந்திரமணி, கோபால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஓட்டுநர் மகேந்திரமணி மோதி கொண்ட லாரியின் இடிபாடுகளிடையே சிக்கி கொண்டார். பின்னர் விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்தவர்கள் நத்தம்பட்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் கடப்பாறை கம்பி போன்ற உபகரணங்களால் லாரியின் முகப்பை உடைத்தெறிந்து மகேந்திரமணியை மீட்டனர். பின்னர் விபத்தில் சிக்கிய 2 ஓட்டுநர்களையும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டடு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நள்ளிரவில் ஏற்பட்ட இந்த விபத்தினால் மதுரை முதல் கொல்லம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போக்குவரத்தை காவல்துறையினர் சரிசெய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.