விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பூவாணி பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டரை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
அப்போது டிராக்டரை ஓட்டி வந்த நபர் தப்பியோடியுள்ளார். இதைத் தொடர்ந்து மணல் அள்ளப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் வாகனம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக பூவாணி பகுதியைச் சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் திருமுருகன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏலம் போன ஊராட்சி மன்ற தலைவர் பதவி - அதிமுக பிரமுகர் மறுப்பு!