ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

author img

By

Published : Jun 8, 2021, 8:51 PM IST

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

விருதுநகர் அருகே கள்ளசாராயம் காய்ச்சிய 3 பேரை விருதுநகர் ஊரக காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கரோனா ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் அரசு, தனியார் மதுபானக் கடைகள் திறக்கப்படமால் மூடப்பட்டுள்ளன.

சோதனை செய்த காவல் துறையினர்

விருதுநகர் அருகே ரோசல்பட்டி பஞ்சாயத்திற்குள்பட்ட முத்தால் நகர்ப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக விருதுநகர் ஊரக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஊரக காவல் நிலைய காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் அங்கு நின்றுகொண்டிருந்த ரோசல்பட்டி முத்தால் நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை அழைத்து விசாரனை செய்ததில், அவர் பழங்களை வைத்து மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.

மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவருடன் மீனாட்சி நகரைச் சேர்ந்த காசிவிஸ்வநாதன் (35), வாழவந்தான் (39) ஆகியோர் சேர்ந்து ஆனந்த் வீட்டில் கள்ளச்சாராய ஊறல் தயார்செய்து குடித்தது தெரியவந்தது.

விசாரணை

இதையடுத்து அவர்களை கைதுசெய்த காவல் துறையினர் அவர்கள் தயார்செய்து வைத்திருந்த 30 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றினர். மேலும் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.