ETV Bharat / state

நாட்டு வைத்தியம் பார்த்து வீடு திரும்பிய சிறுவன் உயிரிழப்பு!

author img

By

Published : Feb 11, 2021, 1:43 PM IST

நாட்டு வைத்தியம் பார்த்த சிறுவன் உயிரிழப்பு
நாட்டு வைத்தியம் பார்த்த சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர்: நாட்டு வைத்தியம் பார்த்து திரும்பிய சிறுவன் உயிரிழந்ததையடுத்து காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் குச்சி கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இவரது ஒரே மகன் ஹரிஷ் (11). இவர் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார்.

தற்பொழுது கரோனா விடுமுறை காலம் என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷுக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

இதனால் ஹரிஷை அழைத்துக்கொண்டு பெற்றோர் பட்டம்புதூரில் உள்ள நாட்டு வைத்தியச் சாலைக்குச் சென்றனர். அங்கு வைத்தியம் பார்த்துவிட்டு திரும்பி வீடு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது ஹரிஷுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்த பெற்றோர் ஆம்புலன்சில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.

நாட்டு வைத்தியம் பார்த்த சிறுவன் உயிரிழப்பு

அங்கு ஹரிஷை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மூதாட்டி கொலை வழக்கில் சிறுவன் கைது - கொலைக்கு காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.